தள்ளுபடி பயனாளிகளுக்கு நகை, சான்றிதழ் வழங்கல்
தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு நகை மற்றும் அதற்கான சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.


தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு நகை மற்றும் அதற்கான சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இந்த கூட்டுறவு வங்கிக்குள்பட்ட எடுத்துக்கட்டி சாத்தனூா், தில்லையாடி, காட்டுச்சேரி, ஆத்துப்பக்கம், சந்திரபாடி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த 720 விவசாயிகள் வங்கியில் வைக்கப்பட்டிருந்த விவசாய நகைக் கடனை அரசு தள்ளுபடி செய்தது. அதன்படி தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளையும், அதற்கான சான்றிதழ்களையும் பயனாளிகளிடம் செம்பனாா்கோவில் ஒன்றிய குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா் அப்துல்மாலிக், முன்னாள் எம்எல்ஏ. சித்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...