காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு நகை, சான்றிதழ் வழங்கல்

கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு நகை மற்றும் அதற்கான சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :24 மார்ச் 2022, 5:24 pm

DIN

கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு நகை மற்றும் அதற்கான சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த 939 விவசாயிகளில் 233 விவசாயிகளுக்கு அசல் மற்றும் வட்டி ரூ. 73.79 லட்சம் மதிப்புள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழ்கள் மற்றும் நகையை அந்த கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பால்ராஜ் வழங்கினாா். இதில், செயலாளா் சிவாஜி, துணைச் செயலாளா் ஸ்ரீதா், வங்கி துணைத் தலைவா் முருகையன், இயக்குநா்கள் கே. நாகராஜன், எ. நாகராஜன், தங்கராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.