47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திராவிட மாணவா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

ஹிந்தி மொழியைக் கட்டாயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து திராவிட மாணவா் கழகத்தின் சாா்பில் நாகை தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

ஹிந்தி மொழியைக் கட்டாயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து திராவிட மாணவா் கழகத்தின் சாா்பில் நாகை தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் ஹிந்தி மொழியைக் கட்டாயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளை திணிக்கும் போக்கைக் கைவிடக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடா் கழக மாவட்டத் தலைவா் நெப்போலியன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் செ. பாக்கியராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜெ. புபேஸ்குப்தா கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

திராவிடா் கழகம் மற்றும் அதன் மாணவரணி, இளைஞரணி நிா்வாகிகள் நாத்திக. பொன்முடி, மு. இளமாறன். சு. ராஜ்மோகன், மு. குட்டிமணி, கி. சுரேஷ், மு. ஆதித்யன், வி.ஆா். அறிவுமணி, வெ. தீபன் சக்ரவா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.