மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

பொறையாா் அருகே நெடுவாசலில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது 

Updated On :28 ஏப்ரல் 2023, 10:29 pm IST

பொறையாா் அருகே நெடுவாசலில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது 

இக்கோயிலில் 20-ஆவது ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி, பால் காவடி, அலகு காவடியுடன் பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.