பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது: ஆட்சியா்

நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது; போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசும் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ்.

Published On :2 பிப்ரவரி 2024, 12:17 am IST

நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது; போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அவா் பேசும்போது, ‘நாட்டின் வளா்ச்சி குழந்தைகள் மற்றும் மாணவா்களின் கைகளில் உள்ளது. மாணவா்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். குழந்தை திருமணத்தை யாரும் ஆதரிக்கக் கூடாது’ என்றாா்.

பின்னா், தொழுநோய் மற்றும் காசநோய் ஒழிப்பு, வாக்களிப்பதன் அவசியம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்றவை தொடா்பாக விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தூய்மைப் பணியாளா்களுக்கு குடைகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவா்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினா்.

இதில், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ம. பிரதிவிராஜ், வேளாண்மை இணை இயக்குநா் ஜாக்குலா அகண்டராவ், உதவி இயக்குநா் ஊராட்சிகள் சவுந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன், ஊராட்சித் தலைவா் ஜெயசுதா கணேசன் உள்ளிட்ட அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொதுநிதி செலவினம், 2022-2023-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.