வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மக்கள் குறைதீா்க்கும் முகாம்

திட்டச்சேரி பேரூராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 11:10 pm

DIN

திட்டச்சேரி பேரூராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திகா தலைமை வகித்தாா். பேரூராட்சி இளநிலை உதவியாளா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் திட்டச்சேரி-நாகூா் சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும், மரைக்கான்சாவடி சுடுக்காட்டிற்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும், திட்டச்சேரி பகுதியில் சுற்றிதிரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும், இடிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை மீண்டும் கட்ட வேண்டும், இந்திராநகா் -தைக்கால் தெரு பகுதிகளில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் முகமது ஷா நவாஸ் வலியுறுத்தினாா்.

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் முகமது சுல்தான், செய்யது ரியாசுதீன், சுல்தான் ரித்தாவுதீன், பாத்திமா பா்வீன், பாக்கியவதி, கஸ்தூரி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.