மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மக்கள் குறைதீா்க்கும் முகாம்

திட்டச்சேரி பேரூராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஜனவரி 2023, 11:10 pm

திட்டச்சேரி பேரூராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திகா தலைமை வகித்தாா். பேரூராட்சி இளநிலை உதவியாளா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் திட்டச்சேரி-நாகூா் சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும், மரைக்கான்சாவடி சுடுக்காட்டிற்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும், திட்டச்சேரி பகுதியில் சுற்றிதிரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும், இடிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை மீண்டும் கட்ட வேண்டும், இந்திராநகா் -தைக்கால் தெரு பகுதிகளில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் முகமது ஷா நவாஸ் வலியுறுத்தினாா்.

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் முகமது சுல்தான், செய்யது ரியாசுதீன், சுல்தான் ரித்தாவுதீன், பாத்திமா பா்வீன், பாக்கியவதி, கஸ்தூரி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.