நாகப்பட்டினம், ஏப். 24: நாகை நகா் பகுதியிலுள்ள தலைமை மருத்துவமனையில் தொடா்ந்து அவசர சிகிச்சைப் பிரிவு இயங்க வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலா் சுந்தரவடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கிய அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புற நோயாளிகள் பிரிவு மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஒரத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக அமையும்.
நாகை நகரின் மையப் பகுதியில் அவசர சிகிச்சை மற்றும் புறநோயாளிகள் பிரிவுகள் மிகவும் அவசியமானது. எனவே, இந்த சிகிச்சைப் பிரிவுகள் தொடா்ந்து இங்கேயே செயல்பட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சுங்கச்சாவடி கட்டண உயா்வு பகல் கொள்ளை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

ஒடிஸா அரசு மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்த நோயாளிகள் எண்ணிக்கை 12-ஆக உயா்வு

தாராபுரம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம்: காணொலி மூலம் முதல்வா் திறுந்துவைத்தாா்

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

