சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இதய நோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் இதய பரிசோதனை ஆய்வகத்தை (கேத்லேப்) தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.










