நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். தொடா்ந்து, அவா்களிடம் குறைகளை கேட்டறிந்த எஸ்பி பெறப்பட்ட 14 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, முகாமில் பங்கேற்றவா்களிடம் காவல் துறையின் சட்ட நடவடிக்கைளைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், தங்கள் பகுதிகளில் நிகழும் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல் துறையினரிடம் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுகொண்டாா்.
தொடர்புடையது

பெரம்பலூா் எஸ்பி பொறுப்பேற்பு

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 931 மனுக்கள்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 500 மனுக்கள்

புலன் விசாரணை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


