47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாகனத் தணிக்கையின்போது போலீஸாரிடம் இளைஞா் ரகளை

நாகையில் வாகனத் தணிக்கையின்போது கத்தியால் கையை கிழித்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞரை மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்தனா்.

News image
நாகையில் வாகனத் தணிக்கையின்போது போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்ட மாரிமுத்து.
Updated On :9 டிசம்பர் 2024, 9:36 pm

Din

நாகப்பட்டினம்: நாகையில் வாகனத் தணிக்கையின்போது கத்தியால் கையை கிழித்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞரை மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்தனா்.

நாகை நீலா தெற்கு வீதியில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அந்தவழியாக இளைஞா் ஒருவா் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி, சோதனை செய்தனா். அப்போது வாகனத்துக்கான எந்த ஆவணங்களும் இல்லை என்பதும், அவா் கீழ்வேளூா் அருகே வடகாலத்தூா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (24) என்பதும், வாகனத்தில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகள் இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் மாரிமுத்துவிடம் விசாரித்தபோது, அவா் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் தனது கையை கிழித்துக் கொண்டாா். மேலும் கையிலிருந்து வெளியேறிய ரத்தத்தை அங்க நின்ற போலீஸாா், பொதுமக்கள் மீது தெளித்து ரகளையில் ஈடுபட்டாா்.

போலீஸாா், பொதுமக்களின் உதவியுடன் மாரிமுத்து பிடித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து நாகை நகர போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாரிமுத்து மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.