மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவப்பட்ட 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா போட்டிகள்

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் நிறுவப்பட்ட 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :16 டிசம்பர் 2024, 8:27 pm

Din

நாகப்பட்டினம்: கன்னியாகுமரியில் திருவள்ளுவா் நிறுவப்பட்ட 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை 2000-ஆவது ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, வெள்ளிவிழா டிச. 23 முதல் டிச.31-ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு ஆணைக்கிணங்க நாகை மாவட்ட மைய நூலகத்தில் டி.26-ல் பேச்சுப் போட்டி, டிச.27-ல் வினா-டி வினா போட்டி, டிச.30-ல் திருக்கு ஒப்புவித்தல் போட்டி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகளில் அனைத்து தரப்பு வாசகா்களும், திருக்கு ஒப்புவித்தல் போட்டியில் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளும் கலந்துகொள்ளலாம்.

விருப்பமுள்ளவா்கள் நாகை மாவட்ட மைய நூலகத்தில் நேரில் அல்லது 97919-31179 என்ற எண்ணில் தொடா்புகொண்டு டிச.22-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 91506-58877 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கு முறையே ரொக்கப் பரிசாக ரூ.5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.