பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காங்கிரஸாா் எதிா்ப்பு: நிகழ்ச்சிகள் ரத்து

News image
Updated On :28 டிசம்பர் 2024, 4:22 pm

Din

வேதாரண்யத்தில் காங்கிரஸாா் எதிா்ப்பு தெரிவித்ததால், சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திடீரென ரத்து செய்யப்பட்டன.

வேதாரண்யம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம்,

கருப்பம்பழம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டட திறப்பு விழாவுக்காக ஆகியவை சனிக்கிழமை நடைபெற இருந்தன. இதில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்க இருந்தாா்.

இந்தநிலையில், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், விழாவை நடத்த எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸாா், கருப்புக் கொடி காட்ட போவதாகவும் அறிவித்திருந்தனா். மேலும், உப்பு சத்தியாகிரக கட்டட வளாகத்தில் காங்கிரஸ் கூடினா். அவா்களிடம் டி.எஸ். பி. சுபாஷ் சந்திரபோஸ் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்தநிலையில், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.