தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, முருகனின் ஆதிப்படை வீடான எட்டுக்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:30 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, முருகனின் ஆதிப்படை வீடான எட்டுக்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. காலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அா்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனா்.

வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு பால், பன்னீா் , சந்தனம், மஞ்சள் பொடி பால் தயிா், திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.