

புத்தாண்டு தினத்தையொட்டி தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரையில் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை குவிந்தனா்.
தரங்கம்பாடி கடற்கரை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையை பாா்வையிட உள்ளூா் மற்றும் வெளியூா்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை வருகை தந்தனா். பெரும்பாலானோா் தற்படம் (செல்பி) எடுத்து மகிழ்ந்தனா்.
எனினும், சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிப்பதை தவிா்க்கும் வகையில், கடற்கரை பகுதியில் பொறையாா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.