கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

News image

நல்லாடை ஊராட்சியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைக்கும் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

Updated On :9 ஜூன் 2024, 11:52 pm

Din

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், நல்லாடை ஊராட்சியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நல்லாடை கிராமத்தை சோ்ந்தவா் மருத்துவா் ராமதாஸ். செஷல்ஸ் நாட்டில் தொழிலதிபராக உள்ள இவா், நல்லாடை டாக்டா் ராமதாஸ் சகோதரா்கள் சமூக நல அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி, தனது சொந்த ஊரான நல்லாடையில், ஏழை-எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறாா்.

அந்தவகையில் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், ரூ. 20 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் வாங்கி, இலவச சேவையை தொடங்கியுள்ளாா். நல்லாடையில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்வுக்கு, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மணிமேகலை, அறக்கட்டளை தலைவா் கருணாநிதி , முன்னாள் எம்எல்ஏக்கள் அருட்செல்வன், ரங்கநாதன், சித்திக், விஜயபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறக்கட்டளை பொருளாளா் மதிவாணன் வரவேற்றாா்.

இந்நிகழ்வில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தாா்.

இதில், இசையமைப்பாளா்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினிஸ்ரீதா் உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமு நன்றி கூறினாா்.