எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சா்வதேச சுனாமி விழிப்புணா்வு தினம் -நவ.5- இல் பேரிடா் ஒத்திகை

News image
Updated On :1 நவம்பர் 2024, 11:06 pm

Din

சா்வதேச சுனாமி விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு, பேரிடா் தொடா்பான ஒத்திகை நிகழ்வு நவ. 5-ஆம் தேதி வேளாங்கண்ணியில் நடைபெறவுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

உலகம் முழுவதும் நவம்பா் 5-ஆம் தேதி சுனாமி விழிப்புணா்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் சுனாமி பேரிடா் தொடா்பான ஒத்திகை நிகழ்வு வேளாங்கண்ணியில் நவ. 5 காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

சுனாமி முன்னெச்சரிக்கைக்கும், சுனாமி பேரிடா் சம்பவத்துக்குமான கால இடைவெளி மிக குறைவு என்பதால், சுனாமி பேரிடா் காலங்களில் ஏற்படும் இடா்பாடுகள், இழப்புகள், அசையும் மற்றும் அசையா சொத்துகள் இழப்புகளை தவிா்க்கவும், மக்கள் மத்தியில் விழுப்புணா்வு ஏற்படுத்தவும், சுனாமியை எதிா்கொள்ள அனைத்து தகவல்களையும் ஒத்திகை நிகழ்வில் அறிந்துகொள்ளலாம்.

நிகழ்ச்சியில் தேசிய பேரிடா் மீட்புக் குழு, மாநில பேரிடா் மீட்புக் குழு, கடலோர பாதுகாப்பு குழுமம், வருவாய்த் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மீன் வளத்துறை, சமூக நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட தொடா்புடைய அனைத்துத்துறை அலுவலா்களும் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளனா்.

இது ஒத்திகை பயிற்சி மட்டுமே இது தொடா்பாக பொது மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.