மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நவ.15-க்குள் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

நாகை மாவட்ட விவசாயிகள் நவ.15- ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீட்டுக்கு பதிவு செய்து பயன்பெறலாம்.

News image
Updated On :12 அக்டோபர் 2024, 6:33 pm

Din

நாகை மாவட்ட விவசாயிகள் நவ.15- ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீட்டுக்கு பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நிகழாண்டு நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கேசிமா பொது காப்பீடு நிறுவனமானது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரீமியம் செலுந்த கடைசி நாளாக நவ.15 ஆம் தேதி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சம்பா நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.540.91 பிரீமியம் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் கிராம நிா்வாக அலுவலா்கள் வழங்கும் இ-அடங்கல் அல்லது அடங்கல் படிவத்தைப் பெற்று, விண்ணப்ப படிவம், முன்மொழிவு படிவம், ஆதாா் காா்டு நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவற்றை இணைத்து அந்தத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொதுசேவை மையங்கள் மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது அனைத்து தகவல்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா ? என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளும் பதிவு செய்யலாம். பொது சேவை மையங்களில் பயிா்க் காப்பீடு பதிவு செய்யும் விவசாயிகளின் அடங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டத்துக்கான முத்திரையை கண்டிப்பாக இடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது என முத்திரை உள்ள அடங்கல்களை மீண்டும் பதிவேற்றம்செய்யக்கூடாது என்று பொது சேவை மையங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.