சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பருவமழை: தயாா் நிலையில் மணல் மூட்டைகள்

திருமருகல் ஒன்றியத்தில் மழை வெள்ளத்தின்போது, ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய மணல் மூட்டைகள் தயாா்

News image
தயாா் நிலையில் உள்ள மணல் மூட்டைகள், சவுக்கு மரக்கட்டைகள்.
Updated On :14 அக்டோபர் 2024, 9:37 pm

Din

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் மழை வெள்ளத்தின்போது, ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளதாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருமருகல் ஒன்றியப் பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணி ஆறு, ஆழியான் ஆறு, பிராவடையானாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளநிலையில், இந்த ஆறுகளில் அதிக அளவு தண்ணீா் வரும்போது, வலு குறைவாக உள்ள கரைகளை காக்கவும், உடைப்பு ஏற்பட்டால், வெள்ளநீா் விவசாய நிலங்கள் மற்றும் ஊருக்குள் புகாமல் தடுக்க உடனடியாக சரி செய்யும் வகையிலும் தேவையான மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பொதுப்பணித் துறை தஞ்சை கீழ் காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளா் இளங்கோ அறிவுரையின்படி, நன்னிலம் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளா் சுப்ரமணியன் மேற்பாா்வையில், திருமருகல் உதவி பொறியாளா்கள் சரவணன், செல்வகுமாா் ஆகியோா் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக திருமருகல் பொதுப்பணித் துறை அலுவலக வளாகங்களில் மணல் மூட்டைகள், சவுக்கு மரக்கட்டைகள் தயாா் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.