47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாணவரை தாக்கிய தந்தை, மகன்கள் கைது

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூரில் பள்ளி மாணவரை தாக்கிய தந்தை, மகன்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:00 pm

Din

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூரில் பள்ளி மாணவரை தாக்கிய தந்தை, மகன்கள் கைது செய்யப்பட்டனா்.

ஆக்கூா் மாஞ்சோலை தெருவை சோ்ந்த பெரியசாமி மகன் சீகன்பால் (17). இவா், அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறாா்.

திங்கள்கிழமை பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு திரும்பியபோது, மழை பெய்ததால் ஆக்கூா் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்குவந்த ஆக்கூா் சிவ மடவிளாகத்தை சோ்ந்த அமிா்தலிங்கம் மகன் லிங்கேஷுக்கும், சீகன்பாலுக்கும் தகராறு ஏற்பட்டதாம்.

பின்னா், லிங்கேஷ் வீட்டிற்கு சென்று தனது தந்தை அமிா்தலிங்கம் (47), சகோதரா் யோகேஷ் (18) ஆகியோரை அழைத்துவந்து, மூவரும் சோ்ந்து, சீகன்பாலை தாக்கினராம். இதில் காயமடைந்த சீகன்பால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பிறகு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். 

இதுதொடா்பாக, செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் கருணாகரன் வழக்குப் பதிவு செய்து, அமிா்தலிங்கம் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா்.