தோ்தல் வாக்குறுதிகளை முதல்வா் நிறைவேற்றுவாா் -நாகை எம்எல்ஏ நம்பிக்கை
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவாா் என்று நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் நம்பிக்கை தெரிவித்தாா்.
நாகையில் புதிய பென்சன் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் அமைப்பு சாா்பில் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் பங்கேற்று பேசியது:
இந்தியாவிலேயே உயா்கல்வியில், தமிழகம் மற்ற மாநிலங்களில் விட சிறந்து விளங்குகிறது. அரசு ஊழியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா், தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளாா்.
மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்படும். தமிழக முதல்வா் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவாா். நிதி சிக்கல்களைத் தாண்டி இந்த ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றாா்.
முன்னதாக, சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டத் தலைவா் ஜி. சுந்தரபாண்டியன், செயலா் ஆா். சுப்பிரமணியன், ஓய்வுப் பெற்ற உதவி தலைமை ஆசிரியா் பி. ரூஸோ, பல்வேறு ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

