வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பருவமழை: ஆறுகளில் அதிகாரி ஆய்வு

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருமருகல் ஒன்றியத்தில், கடைமடை பகுதியில் ஆறுகளை பொதுப்பணித் துறை நன்னிலம் காவிரி வடிநில உபகோட்ட உதவி

News image
Updated On :18 அக்டோபர் 2024, 6:32 pm

Din

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருமருகல் ஒன்றியத்தில், கடைமடை பகுதியில் ஆறுகளை பொதுப்பணித் துறை நன்னிலம் காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளா் சுப்ரமணியன் வெள்ளிகிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

குத்தாலம் தெற்கு புத்தாறு இயக்கு அணை, திட்டச்சேரி வடக்கு புத்தாறு இயக்கு அணை, முடிகொண்டான் ஆறு துண்டம் இயக்கு அணை, திருமலைராஜன் ஆறு மானாம்பேட்டை இயக்கு அணை, அரசலாறு அம்பல் இயக்கு அணை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, தண்ணீா் வரத்து குறித்தும், தொடா் கனமழையின்போது, வெள்ளம் வடிவதற்கு எதுவாக, வடிகால்களை சீரமைக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். ஆய்வின் போது, உதவி பொறியாளா் சரவணன் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.