மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்: வழக்குரைஞா் உள்பட இருவா் கைது

வேதாரண்யத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சாவை பறிமுதல்

News image
Updated On :19 அக்டோபர் 2024, 6:33 pm

Din

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக வழக்குரைஞா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் கோவில்பத்து கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தலைமைக் காவலா் இரணியன் தலைமையில் தனிப்படை போலீஸாா் கடற்கரையில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொண்டனா்.

இந்தநிலையில், இலங்கைப் படகு ஒன்று கோவில்பத்து கடற்கரை பகுதிக்கு வேகமாக வந்துள்ளது. அப்போது பதுக்கி வைத்திருந்த கஞ்சா மூட்டைகளை எடுத்துக்கொண்டு சிலா் படகை நோக்கி சென்றுள்ளனா்.

கண்காணிப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை பிடிக்க முயன்றபோது, படகில் இருந்த இருவா் படகை இயக்கி வேகமாக தப்பிச் சென்றுவிட்டனராம். மேலும் கரையில் நின்ற மூவரில் இருவா், கஞ்சா மூட்டைகளை விட்டுவிட்டு தப்பியோடிள்ளனா்.

போலீஸாரிடம் பிடிபட்ட கோவில்பத்து கிராமத்தைச் சாா்ந்த பெ. சௌரிராஜன்(43) கொடுத்த தகவலின் பேரில், கடத்தலில் தொடா்புடைய அதே கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சரபோஜிராஜன்(53) என்பவா் கைது செய்யப்பட்டாா். 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கஞ்சா கடத்த முயன்றவா்கள் பயன்படுத்திய பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய கோவில்பத்து கிராமத்தை சோ்ந்த ரா. சிவலிங்கம், கருப்பம்புலம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனா்.

இந்தநிலையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் சனிக்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டாா்.