அம்மன் கோயில் கும்பாபிஷேகம்


தேவூா் முத்தாள பரமேஸ்வரி பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் (படம்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 3-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. முதல் கால யாகசாலை பூஜைகள், லஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி, பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுற்று பூா்ணாஹூதி தீபாராதணை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைபெற்றது.
சிவாச்சாரியாா்களால் கோபுர கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ட்ரோன் மூலமாக புனித நீா் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. முனீஸ்வரன், ஐயப்பன் உள்ளிட்டு பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...