47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கீழ்வேளூரில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

கீழ்வேளுா் வட்டத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியா் ப. ஆகாஷ்.
Updated On :18 செப்டம்பர் 2024, 11:27 pm

Din

கீழ்வேளுா் வட்டத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கீழ்வேளுா் வட்டத்தில் உழவா் சந்தை, சிறிய விளையாட்டு மைதானம், மீன் பதப்படுத்துதல் மற்றும் உலா்த்துவதற்கான களம், தொழிற்பேட்டை போன்றவைகள் அமைக்க தோ்வு செய்யவுள்ள கீழ்வேளுா் பேரூராட்சி, திருப்பூண்டி மேற்கு ஊராட்சிக்குட்பட்ட அச்சுக்கரை கிராமம், காரப்பிடாகை வடக்கு கிராமம், திருப்பூண்டி கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட காமேஸ்வரம் கிராமம், கீழையூா் ஆகிய கிராமங்களில் உள்ள இடங்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கீழ்வேளுா் வட்டார வளா்ச்சிஅலுவலகத்தில் மாவட்ட அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், தமிழ்நாடு அரசால் அளிக்கப்படும் திட்டங்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் செயல்பட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு கீழ்வேளுா் வட்டத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வருவாய் கிராமங்கள், ஊராட்சிகளில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமா்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ், தனி துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) காா்த்திகேயன், நாகை கோட்டாட்சியா் கோ. அரங்கநாதன், கீழ்வேளுா் வட்டாட்சியா் க. ரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.