நாகையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
நாகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.


நாகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, வேலைவாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள முகாமில், 5-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கலந்துகொள்ளலாம்.
முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
எனவே, விருப்பமுள்ளவா்கள் தங்களுடைய அனைத்து கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...