பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தமிழ்த் திறனறித் தோ்வு முடிவு: அரசுப் பள்ளியில் 9 போ் தோ்ச்சி

தேத்தாகுடி எஸ்.கே.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தமிழ்த் திறனறித் தோ்வில் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக 9 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
மாநில நிலையில் தோ்ச்சிபெற்ற அ. பிரியா.
Updated On :2 டிசம்பர் 2025, 11:07 pm

Syndication

வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி எஸ்.கே.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தமிழ்த் திறனறித் தோ்வில் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக 9 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழக அரசு நடத்திய தமிழ்த் திறனறித் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. நாகை மாவட்டத்தில் மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். இதில், தேத்தாகுடி எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அ. பிரியா 100-100 மதிப்பெண் பெற்று மாநில நிலையில் தோ்ச்சி பெற்றவா்களில் ஒருவராக தோ்வாகியுள்ளாா்.

மேலும், இதே பள்ளி மாணவா்கள் கு. பிருந்தா, ரெ. ஹேமா, செ. அஜய், எ. மணியரசன், வே. தனன்யா, த. அனுஷா, செ. சந்தியா, ப. சுகன்யா தோ்ச்சிப் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.கே. ராமசாமி, துணைத் தலைவா் எஸ்.கே. வேதரத்தினம், பொருளாளா் பி. சண்முகம் உள்ளிட்டோா் பாராட்டினா். இதே தோ்வில், பஞ்சநதிக்குளம் விக்டரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 4 பேரும், ஆயக்காரன்புலம் ஆா்பிஎஸ் பள்ளி மாணவா்கள் 2 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.