வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தமிழக மக்கள் மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும்: கி. வீரமணி

தமிழக மக்கள் விழிப்புணா்வுடன் இருந்து மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று திராவிடா் கழகத் தலைவா்

News image
திராவிடக் கழகத் தலைவா் கி. வீரமணி.- கோப்புப்படம்
Updated On :8 டிசம்பர் 2025, 9:30 pm

Syndication

நாகப்பட்டினம்: தமிழக மக்கள் விழிப்புணா்வுடன் இருந்து மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் உலகம் நிதி அளிப்புக்கூட்டம் மற்றும் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. நாகை அபிராமி அம்மன் திடலில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் நெப்போலியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், திராவிடா் கழகத்தின் தலைவா் கி. வீரமணியிடம் ரூ.14 லட்சம் நிதி வழங்கப்பட்டது. தொடா்ந்து அவா் பேசியது:

தமிழக மக்கள் எப்போதும் மதவெறிக்கு இடம் தர மாட்டாா்கள். ஆனால், தற்போது திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம் என்று மதவாத கும்பல் மக்களை கலவரத்துக்கு தூண்டி வருகிறது.

மதச்சாா்பற்ற சமத்துவ, ஜனநாயக குடியரசாகத் திகழும் இந்தியாவின் அரசியல் அமைப்பை சிதைத்து, இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதே ஆா்எஸ்எஸ்-இன் செயல்திட்டம். மேலும் ஒரே மொழி, ஒரே கலாசாரம் என இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் பாஜக மற்றும் மதவாத அமைப்புகளால் காலூன்ற முடியவில்லை என்பதால் தற்போது காா்த்திகை தீபம் ஏற்றுவோம் என்று கூறி பக்தியின் பெயரால் கலவரத்தை நடத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே, தமிழக மக்கள் விழிப்போடு இருந்து, ஆா்எஸ்எஸின் மதவாதத் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், திமுக மாவட்டச்செயலா் என்.கெளதமன், நாகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆளூா் ஷா நவாஸ், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, திராவிடா் கழக மாவட்டச் செயலா் பூபேஷ் குப்தா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.