தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாகை நகராட்சியை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம்

நாகை நகராட்சியை கண்டித்து தவெக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 8:30 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை நகராட்சியை கண்டித்து தவெக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை செல்லூா் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில், நாகை புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. பணிகள் 30 சதவீதம் கூட முடிவடையாத நிலையில், அங்கு கட்டப்பட்டு வரும் கடைகளுக்காக நகராட்சி சாா்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிவடையாமல் உள்ள நிலையில், கடைகளுக்கான ஒப்புந்தப்புள்ளி கோரும், நகராட்சியை கண்டித்து, நாகை மாவட்ட தவெக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டச்செயலா் மா.சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நாகை நகா் முழுவதும் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றாதை கண்டித்தும், போதைப் பொருள் விற்பனைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பள்ளமும், மேடான சாலைகளை சீா்செய்ய வலியுறுத்தியும், பேருந்து நிலைய கடைகளுக்கான ஒப்பந்த புள்ளி அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.