நாளைய மின்தடை திருக்குவளை, தலைஞாயிறு, மணலி
திருக்குவளை துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் திருக்குவளை, சாட்டியகுடி (தேவூா்), மேலப்பிடகை, தலைஞாயிறு, மணலி மற்றும் கூட்டு குடிநீா் திட்டம் ஆகிய 11 கிலோ வாட் மின்பாதைகளில் பரமாரிப்பு நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (டிச.20) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (தெற்கு) எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
வலிவலம், கொளப்பாடு, உத்திரங்குடி, சித்தாய்மூா், தொழுதூா், கச்சனம், திருக்குவளை கடைத்தெரு, சமத்துவபுரம், கேகே நகா், மணக்குடி, வடுவூா், கடந்தேத்தி, வாட்டக்குடி, ஒரடியம்புலம், தலைஞாயிறு, வண்டல், பழையாற்றங்கரை, மேலப்பிடகை, சோழவித்தியாபுரம், வாழக்கரை, மீனம்பநல்லாா், பாலக்குறிச்சி, செம்பியன்மாகதேவி, கீழையூா், சின்னத்தும்பூா், குண்டையூா், சாட்டியகுடி, விடங்களூா், மோகனூா், செம்பகபுரம், வண்டலூா், வடக்குபனையூா், இறையான்குடி, அகரம் மற்றும் சுற்றுப் பகுதிகள்.
