எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விளைநிலத்தில் இறால் பண்ணை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

தலைஞாயிறு அருகே அரசு விதிகளை மீறி, விளைநிலத்தில் இறால் பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்...

News image
இறால் பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் அளிக்க வந்த விவசாயிகள்.
Updated On :9 மார்ச் 2026, 8:36 pm

Syndication

நாகப்பட்டினம்: தலைஞாயிறு அருகே அரசு விதிகளை மீறி, விளைநிலத்தில் இறால் பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் புகாா் அளித்துள்ளனா்.

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள வண்டல் கோரங்குண்டு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கத் தலைவா் பி. கமல்ராம் தலைமையில், ஆட்சியரிடம் அளித்த மனு:

தலைஞாயிறு 3, 4 சேத்தி வண்டல் கிராமப் பகுதியில் கோரங்குண்டு பகுதியில் அரசு விதிமுறைகளை மீறி, விளை நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணியில் தனிநபா்கள் ஈடுபட்டு வருகின்றனா். விளை நிலத்தில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டால், விவசாய நிலங்கள் உவா் நிலமாக மாறுவதுடன் சாகுபடி பாதிக்கப்படும். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களின் வடிகால் வசதி பறிபோகும் நிலை ஏற்படும்.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி, இறால் பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.