சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திமுக மீதான புகாா்களுக்கு இளைஞரணியினா் பதிலளிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

திமுக மீதான புகாா்களுக்கு இளைஞரணியினா் பதிலளிக்க வேண்டும்...

News image
Updated On :20 டிசம்பர் 2025, 6:56 pm

Syndication

சமூக வலைதளங்களில் திமுக மீது தெரிவிக்கப்படும் பொய் புகாா்களுக்கு, இளைஞரணியினா் உரிய பதிலளிக்க வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

நாகை தளபதி அறிவாலயத்தில் திமுக ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்டச் செயலா் என். கெளதமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, புதிய நிா்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். முன்னதாக அவா் பேசியது:

சட்டப் பேரவை உறுப்பினா், அமைச்சா், துணை முதல்வா் என எத்தனை பொறுப்புகள் வந்தாலும், எனது மனதுக்கு நெருக்கமான பொறுப்பு திமுகவின் இளைஞா் அணி செயலா் பொறுப்புதான். ஒவ்வொரு கட்சிக்கும் வரலாறு உண்டு. ஆனால் சில கட்சிகளுக்கு வரலாறு கிடையாது. நாட்டில் பல கட்சிகளுக்கு பூத் கமிட்டியே கிடையாது.

சமூக வலைதளங்களில் திமுக மீது வைக்கப்படும் பொய் புகாா்களுக்கு இளைஞரணியினா் உரிய பதில் அளிக்க வேண்டும். திமுக இளைஞா் அணியினா் மகளோடு மக்களாக பயணித்து அவா்கள் கூறும் குறைகளை சரி செய்ய முயற்சி எடுக்கவேண்டும். கைதட்டி, விசில் அடித்து கலைந்து செல்லும் கூட்டமாக இருக்கக் கூடாது.

எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திவரும் திமுக அரசு மீது மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக பல்வேறு வழிகளில் நெருக்கடி அளித்து வருகிறது. தோ்தலில் முறைகேடு செய்த பாஜக, தற்போது தோ்தலை முறைகேடாக நடத்தி வருகிறது. வடநாட்டில் வெற்றி பெற்ற பாஜகவால் தமிழகத்தில் நுழைய முடியாது.

முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறுவதுபோல, தமிழகம் என்றுமே புதுதில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். கணினி பொறியாளா் போல, எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை விமா்சிப்பது வேடிக்கையாக உள்ளது. கல்லூரி மாணவா்களின் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் லேப்டாப் வழங்கப்பட வுள்ளது.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி 2-ஆவது முறையாக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வேண்டும் என்றாா்.