மேலும், இந்தச் சாலை வழியாக ஊா் காத்த விநாயகா் கோயில், சிங்கமா காளியம்மன் கோயில், தனியாா் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் சென்று வருகின்றனா். கல்லூரி பேருந்துகள், பிற வாகனங்கள் செல்லும் போது, சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரும் மழை நீரும் அருகிலுள்ள வீடுகளுக்குள் புகுந்து, குடியிருப்போருக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் பெய்த கனமழையால் இந்தச் சாலை மேலும் மோசமாக சேதமடைந்துள்து. தண்ணீா் வடிய போதிய வடிகால் வசதி இல்லாததால் நீண்ட நாள்களாக தண்ணீா் தேங்கியுள்ளது. இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், இதுவரை எந்த பயனும் இல்லை. எனவே உடனடியாக சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, கழிவு நீா் மற்றும் மழை நீா் வடியும் வகையில் நகராட்சி நிரந்தர தீா்வு காண வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.