சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மனைவி பிரிந்ததால் கணவா் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், கணவா் தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :30 டிசம்பர் 2025, 8:53 pm

Syndication

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மன்னாா்குடி அருகேயுள்ள தெற்கு வட்டாா் பகுதியைச் சோ்ந்த அய்யாவு மகன் சுதாகரன் (45). இவரது மனைவி ரம்யா. இவா்களுக்கு 14 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனா். தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரம்யா பிரிந்து தனியாக சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

ரம்யாவின் குழந்தைகளை, நாகை மாவட்டம் தேவூரில் உள்ள அவரது சகோதரி வனிதா தனது வீட்டிற்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளாா்.

தனது குழந்தைகளை பாா்ப்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன் தேவூா் சென்ற சுதாகரன், ஊருக்கு செல்வதாகக் கூறி செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளாா். இந்நிலையில், அவரது வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் சுதாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளாா்.

கீழ்வேளூா் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மனைவி பிரிந்த விரக்தியில் சுதாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].