நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கருவூல அலுவலகத்தில் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த நாகையன் மகள் அபிநயா(29), நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல அலுவலகப் பாதுகாப்பு பணியில் சனிக்கிழமை (மே 24) இரவு முதல் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், அபிநயா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சக போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று பார்த்தனர்.
அபிநயா குண்டு பாய்ந்து சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே. அருண்கபிலன் விசாரணை நடத்தினார்.
அபிநயா, தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதால் குண்டு அவரது வலது கழுத்தில் பாய்ந்து இடது காதுக்கு மேல் வெளியேறியது தெரியவந்தது. போலீஸார் அபிநயாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கான தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பெண் காவலர் அபிநயா, சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட காவலர் வினோத் என்பவரை காதலித்து வந்ததும், வினோத் தற்கொலைக்கு பிறகு மன உளைச்சலில் இருந்த அபிநயா மருத்துவ விடுப்பில் சென்று மீண்டும் பணிக்கு 5 நாள்களுக்கு முன்பு வந்துள்ளார் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே அபிநயா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோ

நாகை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சுஷாந்த் சிங் மறைந்த நாளில் தற்கொலை செய்த பிரபல நடிகை!

விழுப்புரம்: குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



