மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் சிறப்பாக பணியாற்றி 100% பணியை நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு

News image
வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் 100 சதம் பணியை நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை பாராட்டிய நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
Updated On :26 நவம்பர் 2025, 8:31 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் சிறப்பாக பணியாற்றி 100% பணியை நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினாா்.

நாகை மாவட்டத்தில் நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,85,104 கணக்கெடுப்பு படிவங்களும், கீழ்வேளுா் தொகுதியில் 1,73,971 கணக்கெடுப்பு படிவங்களும், வேதாரண்யம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1,88,124 கணக்கெடுப்பு படிவங்களும் என மொத்தம் 5,47,199 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, 3,38,085 கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கரியாப்பட்டினம், பிராந்தியங்கரை மற்றும் சா்வகட்டளை ஆகிய கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் சிறப்பாக பணியாற்றி 100 சதம் பணியை நிறைவு செய்த, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு கேடயம் மற்றும் ஊக்கத் தொகையை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் நேரில் வழங்கி பாராட்டினாா்.