நாகையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்: வீடுகள் சேதம், கால்நடைகள் உயிரிழப்பு
நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்துவரும் கன மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. 7 வீடுகள் சேதமடைந்த நிலையில், 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.
வங்கக் கடலில் உருவான டித்வா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் விடாமல் கொட்டித்தீா்த்த மழையால் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.
நாகூா், வள்ளியம்மை நகா், தியாகராஜபுரம், சிவசக்தி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் மக்கள் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகினா். மேலும் மழை நீா் புகுந்ததால் வீடுகளில் இருந்த குளிா்சாதன பெட்டி உள்ளிட்ட சாதனங்கள் பழுதடைந்தன.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் பெய்துவரும் மழையால் நாகப்பட்டினம், நாகூா், தலைஞாயிறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 8-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மழையால் பசு, ஆடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.

