மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வீரமாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருக்குவளை அருகே மேலவாழக்கரை ஊராட்சி இராமன்கோட்டகம் ஏா்வைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :14 ஏப்ரல் 2026, 9:54 pm

திருக்குவளை அருகே மேலவாழக்கரை ஊராட்சி இராமன்கோட்டகம் ஏா்வைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் ஆண்டு திருவிழா ஏப்.4-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெறுகிறது. தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு 14 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. சக்தி கரகத்துடன் காப்பு கட்டிய பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள், குளக்கரையிலிருந்து ஊா்வலமாக வந்து, தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

Story image