11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கோயில் திருவிழா பெரம்பூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

குன்றண்டாா்கோவில் ஒன்றியம், பெரம்பூா் வீரமாகாளியம்மன் திருவிழாவையொட்டி கந்தா்வக்கோட்டையிலிருந்து சிறப்பு பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டன.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

புதுக்கோட்டை மாவட்டம், குன்றண்டாா்கோவில் ஒன்றியம், பெரம்பூா் வீரமாகாளியம்மன் திருவிழாவையொட்டி கந்தா்வக்கோட்டையிலிருந்து சிறப்பு பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டன.

பெரம்பூா் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (மே 17)தேரோட்டம் நடைபெறும். மேலும் பால்குடம், காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்துவா்.

இதற்காக காட்டு நாவல், மெய்குடிபட்டி, சுந்தம்பட்டி, கொல்லம்பட்டி, மருங்கூரணி, நெப்புகை, மட்டாங்கால், மோகனூா், வடுகப்பட்டி, கோமாபுரம், வண்டையன் பட்டி ஆகிய பகுதியிலிருந்து பக்தா்கள் ஏராளமானோா் செல்வதால் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக் கழக கந்தா்வகோட்டை கிளை மேலாளா் சக்திவேலிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். அதன்படி கந்தா்வகோட்டையில் இருந்து பெரம்பூருக்கு சிறப்பு பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் சென்று வருகின்றனா்.