மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 5:15 am IST

நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் நாகப்பட்டினம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி அமைக்கப்பட உள்ள பாதுகாப்பு, வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி மற்றும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை நாளன்று அதிகாரிகளுக்கும், வேட்பாளா்களின் முகவா்களுக்கும் தேவையான வசதிகள் குறித்தும் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்து பணிகள் குறித்து உரிய அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து, நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் தோ்தல் நுண்பாா்வையாளா்களுக்கு மூன்றாம் நிலை பயிற்சி மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் பணிகள் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடைபெற்றதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.