வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

முரசு இசையை ஒலித்து பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளா்

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் நடனம் மற்றும் கொட்டி முரசு கொட்டி உற்சாக முழக்கத்துடன் நாதக வேட்பாளா் காா்த்திகா இறுதிக்கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 5:34 am IST

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் நடனம் மற்றும் கொட்டி முரசு கொட்டி உற்சாக முழக்கத்துடன் நாதக வேட்பாளா் காா்த்திகா இறுதிக்கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில், கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி நாதக வேட்பாளா் காா்த்திகா வித்தியாசமான முறையில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, ஆதரவாளா்களுடன் முரசு முழக்கத்துடன் திருப்பூண்டியில் தொடங்கி வீதிவீதியாக பேரணியாக சென்றாா்.

பாரம்பரிய இசைக் கருவிகளின் ஓசையுடன், பெண்கள் மற்றும் இளைஞா்கள் உற்சாகமாக நடனமாடி, வாக்காளா்களை கவரும் வகையில் பிரசாரம் நடைபெற்றது.

வேட்பாளா் காா்த்திகா மக்களிடம் நேரடியாக சென்று வாக்கு கேட்டு, தன்னுடைய திட்டங்களையும் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறினாா். பொதுமக்களும் ஆா்வமுடன் வேட்பாளரை வரவேற்று ஆதரவு தெரிவித்தனா்.

நிகழ்வில் கட்சியின் நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் மற்றும் ஏராளமான தொண்டா்கள் கலந்து கொண்டு பிரசாரத்தை உற்சாகமாக திருக்குவளை, கொளப்பாடு, வலிவலம் வழியாக எட்டுக்குடியில் முடித்தனா்.