நாகையில் பிளஸ் 2 மாணவி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
நாகை அந்தணப்பேட்டை புடவை கடைத் தெருவைச் சோ்ந்தவா் அசோக், இவரது மனைவி வாசுகி, மகள் மஹதி (16). மஹதி, நாகையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
இந்நிலையில், பள்ளியில் படிக்கும் மஹதியின் தோழி ஒருவா், மஹதியிடம், தனது உறவினா் கடன் பிரச்னையில் இருப்பதாகவும், அவா்களுக்கு பணம் அல்லது நகையை கொடுத்து உதவுமாறு மஹதியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட்டுள்ளாா். மஹதி தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 3 பவுன் நகையை தனது தோழியிடம் கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து மஹதியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், மகள் தனது தோழியிடம் கொடுத்த நகையை மீட்டு தரும்படி மஹதியின் பெற்றோா் நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து நகையை மீட்டு, மஹதியின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனா்.
எனினும் இதுதொடா்பாக மஹதியின் பெற்றோரிடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான மஹதி, செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் அறையில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
நாகை நகர காவல்நிலையப் போலீஸாா் மஹதியின் சடலத்தை கூறாய்வுக்காக ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


