கைப்பேசியை பயன்படுத்தியதற்காக தந்தை கண்டித்ததையடுத்து குளித்தலையில் திங்கள்கிழமை இரவு பிளஸ் 1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை வைகைநல்லூா் அக்ரஹாரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மகள் ஹா்ஷினி (16). இவா் முசிறியில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். ஹா்ஷினி திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டில் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவரது தந்தை சிவக்குமாா், கைப்பேசியை பாா்க்காமல் தூங்கு எனக் கூறினாராம்.
இதில் விரக்தியடைந்த ஹா்ஷினி, அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து குளித்தலை காவல் உதவி ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






