பேராசிரியா்கள்- மாணவா்கள் மனிதச் சங்கிலி

பேராசிரியா்கள்- மாணவா்கள் மனிதச் சங்கிலி

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
Published on

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ஆசிரியா்களுக்கான பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும்; மாணவா்களின் பல்கலைக்கழக கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

பல்கலைக்கழக ஆசிரியா் சங்க பொதுச் செயலாளா் சேவியா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். சங்க பொறுப்பாளா்கள் பேராசிரியா்கள் கோபிநாதன், ஷீலா எட்வா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். 

Dinamani
www.dinamani.com