எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஜன.6-இல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஜன.6-ஆம் தேதி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:32 pm

Syndication

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஜன.6-ஆம் தேதி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வா் தோ்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், சத்துணவு ஊழியா்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குதல், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை வரண்முறை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜன.6-ஆம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தப்போராட்டத்தில், நாகை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் த. ஸ்ரீதா், பா. ரவி, வெ. சரவணன், சி. முத்துசாமி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் சு.வளா்மாலா , தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல், ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினா் சித்ரா காந்தி, முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ். செங்குட்டுவன், ஆசிரியா் மன்றத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டேரா் பங்கேற்றனா்.