எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழகத்தில் ஜன.6-இல் சாலை மறியல்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் அறிவிப்பு

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன்.

News image
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன்.
Updated On :2 ஜனவரி 2026, 8:30 pm

Syndication

தமிழகத்தில் ஜன.6-ஆம் தேதி பழைய ஓய்வூதியத் திட்ட அமலாக்கத்தை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் சாலை மறியல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகையில் வெள்ளிக்கிழமை அந்த சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பாத்திமா தலைமையில் நடைபெற்ற சங்க கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜன.6-ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ தொடா் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பிலும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தூய்மைக் காவலா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், டெங்கு கொசு ஓழிப்பு பணியாளா்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும், பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு மற்றும் பணிநிரந்தரம் வழங்க வேண்டும், ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கணக்காளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் பாத்திமா, தமிழ்நாடு சாலைப் பணியாளா் சங்கத் தலைவா் ரவிக்குமாா், ஊராட்சிகள் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் கமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.