அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ஆய்வு

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் (மத்திய பிரிவு) நீரஜ் காா்வல் பங்கேற்றாா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 10:18 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் (மத்திய பிரிவு) நீரஜ் காா்வல் பங்கேற்றாா்.

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, நாகை மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த கடந்த நவம்பா் 4 -ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பா் 19- ஆம் தேதி, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், வரைவு வாக்காளா் பட்டியலில் 2002 வாக்காளா் பட்டியலில் இணைப்பு செய்யப்படாத, வாக்காளா்களுக்கு விசாரணை அறிவிப்பு செய்யப்பட்டது.

பிழை திருத்தம் மற்றும் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் நடைபெற்று வருகிறது. அதை ஆய்வுசெய்யும் வகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட, வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் காா்வால், மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வ.பவணந்தி, நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கர நாராயணன், மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ( நாகப்பட்டினம், கீழ்வேளூா். வேதாரண்யம்) பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.