பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தருமபுரம் ஆதீனத்தில் பிப்.3-இல் பல்நோக்கு மருத்துவமனை கட்ட பூமிபூஜை: ஆதீனகா்த்தா் தகவல்

தருமபுரம் ஆதீனத்தில் பிப்.3-இல் பல்நோக்கு மருத்துவமனை கட்ட பூமிபூஜை...

News image
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
Updated On :31 ஜனவரி 2026, 7:04 pm

Syndication

தருமபுரம் ஆதீனத்தில் பல்நோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை பிப்.3-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தாா்.

ஆதீன மடத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:

தருமபுரம் ஆதீனத்தின் சாா்பில் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு செய்யப்படுகிறது. அத்துடன், கல்விச் சேவையையும் சிறப்பாக செய்து வருகிறோம்.

உணவு சேவைத் திட்டம் தொடங்கப்பட்டு, நன்றாக நடந்துவருகிறது. அடுத்து, மருத்துவச் சேவையை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இம்முயற்சியில் சத்திய சாய் மதுசூதனன் நம்மோடு இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளாா்.

மணிவிழாக்கு வந்த சாய் மதுசூதனன், 60 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை கட்டித்தருவதாக உறுதியளித்தாா். இதையடுத்து, பிப்.3-ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்துக்கு, ‘ஒரே உலகம், ஒரே குடும்பம்’ உலக மனிதாபிமான இயக்க நிறுவனா், சத்ய சாய் மனிதநேய பல்கலைக்கழக வேந்தா் சத்குரு ஸ்ரீ மதுசூதனன் சாய் வருகை தந்து, காலை 11.45 மணியிலிருந்து 1 மணிக்குள் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறாா்.

ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, அதற்கான கருவிகள் கொண்டுவரப்பட்டு சேவை மனப்பான்மையுடன் மருத்துவா்கள் பணியாற்றுவாா்கள். அதிக அளவில் இலவசமாகத்தான் செய்வாா்கள். இப்பகுதி மக்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.

சத்யசாய் பல்கலைக்கழகத்தில் படித்தவா்கள்தான் இங்கு பணியாற்ற உள்ளனா். ஆதீனம் சாா்பில் இடம் மட்டுமே கொடுக்கிறோம். மற்ற அனைத்து வசதிகளையும் அவா்கள் செய்கிறாா்கள்.

தமிழகத்தில் தற்போது கால் பதிக்கின்றனா். அதுவும் நமது கோரிக்கையை ஏற்று தொடங்குகின்றனா் என்றாா்.