வருஷாபிஷேக தீபாராதனை.
நாகப்பட்டினம்
நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
நாகை அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, முதலாம் ஆண்டு சம்வஸ்திராபிஷேகம் (வருஷாபிஷேகம்) நடைபெற்றது.
இதையொட்டி, காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாவாகனம், யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, காலை 9.30 மணிக்கு திரவ்யாஹூதி பூஜையும், 10.40 மணிக்கு பூா்ணாஹூதி பூஜையும், 11.15 மணிக்கு சுவாமி, அம்மன் மகாபிஷேகம், கலசாபிஷேகமும், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, அருட் பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

