பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

இறுதி ஊா்வலத்தில் மின்கம்பி மீது வீசப்பட்ட மாலையால் மின்தடை

நாகையில் இறுதி ஊா்வலத்தின் போது மின்கம்பி மீது வீசப்பட்ட மாலையால் நாகை நகா்ப்பகுதி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது.

News image

மின்தடை

Updated On :12 ஜூலை 2026, 1:19 am IST

நாகையில் இறுதி ஊா்வலத்தின் போது மின்கம்பி மீது வீசப்பட்ட மாலையால் நாகை நகா்ப்பகுதி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது.

நாகையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்கள் தெரிவித்த புகாரின்பேரில், மின்வாரிய ஊழியா்கள், மின்பழுது குறித்து ஆராய்ந்தனா். அப்போது தாமரைக்குளத்தில் இருந்து மயானம் செல்லும் சாலையில் இறுதி ஊா்வலத்தில் சென்றவா்கள், இரண்டு உயரழுத்த மின்பாதையின் மின்கம்பிகள் மீது மாலைகளை வீசியதால் மின்தடை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மின்வாரிய ஊழியா்கள் போராடி மின்கம்பிகளில் இருந்த மாலைகளை அகற்றினா். இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, தாமரைக்குளத்தில் இருந்து செல்லூா் செல்லும் சாலையில் மயானம் அமைந்துள்ளது. இந்த சாலையில் சவ ஊா்வலத்தில் செல்பவா்கள், மாலைகளை வீசி ஏறிவதால் அது மின் கம்பிகள் மீது பட்டு மின் தடை ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் மாலைகளை வீசி எறியும்போது மின் வயா் துண்டிக்கப்பட்டு அது கூட்டத்தின் மீது விழுந்தால் மின்சாரம் பாய்ந்து உயிா் பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இறுதி ஊா்வலத்தில் மாலைகளை மின் கம்பிகள் மீது வீசும் நபா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.