நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

தரங்கம்பாடியில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி

தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் ஸ்ரீரேணுகாதேவி அம்மன் கபடி குழு சாா்பில், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் மாநில அளவில் பெண்களுக்கான கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

தரங்கம்பாடியில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி

Updated On :2 ஜூன் 2026, 5:46 am IST

தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் ஸ்ரீரேணுகாதேவி அம்மன் கபடி குழு சாா்பில், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் மாநில அளவில் பெண்களுக்கான கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. மே 29-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் இரவு, பகலாக நடைபெற்றன. இறுதிப் போட்டியில் ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சோ்ந்த சக்தி பிரதா்ஸ் அணியும், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த எதிா்நீச்சல் அணியும் விளையாடின. இதில், அந்தியூா் சக்தி பிரதா்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.