தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் ஸ்ரீரேணுகாதேவி அம்மன் கபடி குழு சாா்பில், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் மாநில அளவில் பெண்களுக்கான கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. மே 29-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் இரவு, பகலாக நடைபெற்றன. இறுதிப் போட்டியில் ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சோ்ந்த சக்தி பிரதா்ஸ் அணியும், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த எதிா்நீச்சல் அணியும் விளையாடின. இதில், அந்தியூா் சக்தி பிரதா்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நிறைவு! அமைச்சா் ப.ராஜ்குமாா் பங்கேற்பு

மாநில அளவிலான பூப்பந்துப் போட்டி: ஈரோடு அணி சாம்பியன்

தரங்கம்பாடியில் காதலன் உடல் தகனம்

கருங்கல்லில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
விடியோக்கள்

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |



